ADDED : செப் 03, 2024 04:34 AM
மதுரை : மதுரை அய்யர்பங்களா உச்சபரம்பு மேடு நாமத்வார் பிரார்த்தனை மையத்தில்ராதாகல்யாண உற்ஸவம் நாளை நடக்கிறது.
இங்கு கிருஷ்ண ஜெயந்தி, ராதா கல்யாண உற்ஸவத்தை முன்னிட்டு ஆக.29 முதல்தினமும் மாலை 5:45 மணி முதல் 7:45 வரை முரளிதர சுவாமிகளின் சீடர் சனத்குமார் பாகவதர் ஸ்ரீமத் பாகவத மகாத்மியம் சொற்பொழிவும்,காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை ஸ்ரீமத் பாகவதம் தசமஸ்கந்த பாராயணமும், மாலை 4:30 முதல் 5:45 வரை மகா கீர்த்தனம், இரவு 7:45க்கு சுவாமி பல்லக்கில் புறப்பாடும்நடக்கிறது.
இன்று மதியம் 1:30 மணிக்கு ராதாகிருஷ்ணன் பஜன் மண்டலியின் அஷ்டபதி பஜனைநடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராதா கல்யாணம் நாளை (செப்.4)காலை 8:00 மணிக்கு நடக்கிறது.
செப்.5 காலை 10:00 மணிக்கு விடையாற்றி உற்ஸவங்கள் நடக்க உள்ளன. தினமும்இரவு 8:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகள் ஹரிதாஸ் தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.