sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விசாரணை கைதி மதுரையில் மரணம் போலீஸ் மீது உறவினர்கள் புகார்

/

விசாரணை கைதி மதுரையில் மரணம் போலீஸ் மீது உறவினர்கள் புகார்

விசாரணை கைதி மதுரையில் மரணம் போலீஸ் மீது உறவினர்கள் புகார்

விசாரணை கைதி மதுரையில் மரணம் போலீஸ் மீது உறவினர்கள் புகார்


ADDED : ஏப் 06, 2024 04:22 AM

Google News

ADDED : ஏப் 06, 2024 04:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் கார்த்திக் 32, என்பவர் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மதுரை யாகப்பா நகர் 'இட்லி' கார்த்திக். வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ஏப்.,3ல் வழிப்பறி வழக்கில் இவரை மதிச்சியம் போலீசார் கைது செய்து சிறைக்கு அழைத்து வந்தனர்.

அவரது உடல்நிலை சரியில்லாததால் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலை இறந்தார். இவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.

'போலீஸ் விசாரணையின்போது கார்த்திக் தாக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே அவர் இறந்தததாக' தந்தை கணேசன் குற்றம்சாட்டினார்.

நேற்று காலை போலீசை கண்டித்து உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் சமரசம் செய்தனர். நேற்று மதியம் பிரேத அறைக்கு வந்து மதுரை ஜே.எம். 2 மாஜிஸ்திரேட் கல்யாண் மாரிமுத்து விசாரணை நடத்தினார்.






      Dinamalar
      Follow us