sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஓய்வு பேராசிரியர்கள் வயநாடு நிவாரணம்

/

ஓய்வு பேராசிரியர்கள் வயநாடு நிவாரணம்

ஓய்வு பேராசிரியர்கள் வயநாடு நிவாரணம்

ஓய்வு பேராசிரியர்கள் வயநாடு நிவாரணம்


ADDED : ஆக 15, 2024 04:44 AM

Google News

ADDED : ஆக 15, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழக மதுரை கிளையின் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. பேராசிரியர் ஆனந்தன் வரவேற்றார். செயலாளர் பெரியதம்பி செயல் அறிக்கை சமர்ப்பித்தார்.

கூட்டத்தில் வயநாடு நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். அகில இந்திய ஓய்வூதியர் சங்க புரவலர் பார்த்தசாரதி, பேராசிரியர்கள் கிருஷ்ணன், ராமமூர்த்தி உட்பட பலர் பேசினர். பொதுச் செயலாளர் மனோகரன் ஓய்வூதியர் சங்கம் சார்பில் வயநாடு நிவாரண பணியாக ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் நிதி வழங்கியதாக கூறினார்.

சென்னையில் ஆக.,28 ல் நடக்க உள்ள போராட்டத்தில் மதுரை கிளை சார்பிலும் பங்கேற்க வேண்டும். ஓய்வூதியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேராசிரியர் ஜெகநாதன் நன்றி கூறினார். பேராசிரியர்கள் ராஜேந்திரன், சண்முகசுந்தரம், விஜயன், லட்சுமணன் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us