நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி கீழப்புதுார் வார்டு 8, சிவன்காளை தேவர் தெரு முன்பாக மதுரை ரோட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது.
குறிப்பிட்ட 3 வீடுகளுக்கு முன்பாக பணி முழுமையடையவில்லை. உடனடியாக கட்டித்தரக்கோரி 3 வீடுகளைச் சேர்ந்தவர்கள் மதுரை ரோட்டில் நேற்று காலை 10:20 மணி முதல் 10:40 மணி வரை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசம் செய்தனர்.

