sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குன்றத்தில் ஆய்வுப் பணிக்காக ரோப்கார் குழு அமைப்பு

/

குன்றத்தில் ஆய்வுப் பணிக்காக ரோப்கார் குழு அமைப்பு

குன்றத்தில் ஆய்வுப் பணிக்காக ரோப்கார் குழு அமைப்பு

குன்றத்தில் ஆய்வுப் பணிக்காக ரோப்கார் குழு அமைப்பு


ADDED : ஆக 16, 2024 04:32 AM

Google News

ADDED : ஆக 16, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் ரோப் கார் அமைக்க ஆய்வு பணிக்காக மூன்று நிறுவனங்கள் அடங்கிய குழுவை அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் மூலவர் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். உள்ளூர், வெளியூர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமணம் செய்து கொள்ள வருகின்றனர். பவுர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர்.

இங்குள்ள மலைமேல் காசி விஸ்வநாதர் கோயில், சுனை தீர்த்தம் உள்ளது. காசி விசுவநாதரை தரிசனம் செய்வதற்கு முதியோர், மாற்றுத்திறனாளிகள் செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே குன்றத்து மலைமேல் ரோப்கார் அமைக்க பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சட்டசபையில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., வும் பேசினார். திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் அமைப்பதற்காக முதல் கட்டமாக கடந்தாண்டு கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கருத்து கேட்பு நடந்தது. இதில் அனைவருமே ரோப்கார் அவசியம் என தெரிவித்தனர்.

இரண்டாம் கட்டமாக 2023 ஆகஸ்டில் மலைக்குப் பின்புறம் மலை அடிவாரத்தில் ரோப் கார் அமைப்பதற்காக சென்னை ஐ.டி., காட் நிறுவனத்தினர் சர்வே பணிகளை மேற்கொண்டனர். தற்போது ரோப்கார் அமையவுள்ள இடம், உயரம், இரும்பு கம்பிகள், ரோப்கார் செல்லும் நேரம், திரும்பும் நேரம், இடத்தின் அளவு, ஆரம்பிக்கும் இடம், மலை மேல் இறங்கும் இடம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ள, ஹரியானா ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எக்கனாமிக் சர்வீசஸ், ரோப்வே டிவிஷன் வாப்காப்ஸ், மும்பை இந்தியன் போர்ட் ரயில்வே அண்ட் ரோப்வே கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் அடங்கிய குழுவை அறநிலையத்துறை அமைத்து உள்ளது.

அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா கூறுகையில், ரோப்கார் ஆய்வுக்காக குழு அமைத்துள்ளதும், அடுத்தடுத்த பணிகளுக்காக முதல்வர் உத்தரவிட்டிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. குழு அறிக்கை சமர்ப்பித்த பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை துவங்கும். இந்த ஆண்டு பல்வேறு கோயில்களுக்கு ரோப் கார் வர உள்ளது. விரைவில் திருப்பரங்குன்றத்திலும் அமையும். பக்தர்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us