ADDED : ஆக 07, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் சன்மார்க்க சங்க கூட்டம் நடந்தது. தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் நல்லுசாமி முன்னிலை வகித்தார். அருள் விளக்கு ஏற்றி அகவல் படிக்கப்பட்டது.
சந்திரசேகரன் ஜீவகாருண்யம் என்ற தலைப்பில் பேசினார். நிர்வாகி சாந்தி ஜோதி வழிபாடு செய்தார். ராஜ்குமார் குடும்பத்தார் அன்னதானம் வழங்கினர்.