sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசு விடுதி மாணவர்களுக்கு தனியார் மூலம் உணவு வழங்க திட்டம்: சமையலர்கள் பணிக்கு வந்தது ஆபத்து

/

அரசு விடுதி மாணவர்களுக்கு தனியார் மூலம் உணவு வழங்க திட்டம்: சமையலர்கள் பணிக்கு வந்தது ஆபத்து

அரசு விடுதி மாணவர்களுக்கு தனியார் மூலம் உணவு வழங்க திட்டம்: சமையலர்கள் பணிக்கு வந்தது ஆபத்து

அரசு விடுதி மாணவர்களுக்கு தனியார் மூலம் உணவு வழங்க திட்டம்: சமையலர்கள் பணிக்கு வந்தது ஆபத்து


ADDED : மே 17, 2024 06:05 AM

Google News

ADDED : மே 17, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விடுதிகளில் தனியார் மூலம் உணவு சமைத்து வழங்கும் திட்டத்தை ஜூன் முதல் நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான விடுதி சமையலர் பணியிடங்கள் கேள்விக்குறியாகியுள்ளது.

மாநில அளவில் இத்துறைக்கு உட்பட்டு 1453 பள்ளி, கல்லுாரி விடுதிகள் உள்ளன. இங்கு 1 லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்காக பள்ளி விடுதிக்கு ஒரு மாணவருக்கு தலா ரூ.1100, கல்லுாரி மாணவருக்கு தலா ரூ.1500 என மாதந்தோறும் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

தற்போது இவ்விடுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப சங்கங்கள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மதுரை, கோவை, திருச்சி மாவட்டங்களின் விடுதிகளில் முதற்கட்டமாக மாணவர்களுக்கு 3 வேளைகளும் தனியார் மூலம் உணவுகள் சமைத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்காக ஒருங்கிணைந்த நவீன சமையலறைக் கூடங்கள் (சென்ட்ரலைஸ்டு கிச்சன்) அமைத்து, 7 கிலோ மீட்டருக்குள் உள்ள விடுதிகளுக்கு சமைத்த உணவுகளை வேன்களில் கொண்டு சென்று மாணவர்களுக்கு சப்ளை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் தற்போதுள்ள காலை உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு இந்த முறையில் தான் உணவு வழங்கப்படுகிறது.

ஆனால் சமையல் கூடம், சமையலர்கள் உள்ளிட்ட வலுவான கட்டமைப்புகள் கொண்ட அரசு விடுதிகளிலும் மாணவர்களுக்கு உணவு வழங்குவதை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆசிரியர் காப்பாளர்கள் சங்க மாநில தலைவர் மணிமொழி கூறியதாவது:

சென்னையில் மட்டும் ஆதிதிராவிடர் நலத்துறையின் ஒருசில விடுதிகளில் இம்முறை செயல்பாட்டில் உள்ளது. உணவு தரமாக இல்லை, சரியான நேரத்திற்கு மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என பல்வேறு புகார்கள் தொடர்ந்து கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கப்பட்டுள்ளது. தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட்டு, விடுதிகளில் காலியாக உள்ள சமையலர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முன்வரவேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us