sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தன்னை அறிவதே உயர் ஞானம்

/

தன்னை அறிவதே உயர் ஞானம்

தன்னை அறிவதே உயர் ஞானம்

தன்னை அறிவதே உயர் ஞானம்


ADDED : ஏப் 30, 2024 05:21 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தன்னை அறியும் அறிவே உயர்ஞானமாகும் என சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசினார்.

சின்மயா மிஷன் மற்றும் தாம்பிராஸ் எஸ்.எஸ்.காலனி டிரஸ்ட் சார்பாக திருமந்திரம் தொடர் சொற்பொழிவு நடந்தது.

அதில் சிவயோகானந்தா பேசியது: திருமந்திரத்தில் அறிவுதயம் என்னும் பகுதியில் சிவஞானம் பெறுவதின் முக்கியத்துவத்தினை திருமூலர் பாடியுள்ளர். சிவனை வணங்குவது, வழிபடுவது, சிவனிடத்தில் பிரார்த்திப்பதோடு நம்முள் இருக்கும் சிவ தத்துவத்தினை உணர முற்பட வேண்டும்.

உடலும், உலக விஷயங்களும் தற்காலிகமாக இன்பத்தைக் கொடுப்பவை. தன்னை அறியும் அறிவே உயர்ஞானமாகும். அந்த ஞானத்தை குரு உபதேசங்களின் மூலம் பெற்று தன்னுள் இருக்கும் கடவுளை அறிய தனக்கொரு கேடில்லை என்று கூறுகின்றார்.

உலக அறிவைக் காட்டிலும் மிக நுட்பமானது இறைஞானம். ஞானத்திற்கு உள்ளத்தூய்மை முக்கியமாகும். அத் தூய்மையானது மறைநூல்களை கேட்டல், படித்தல், சிந்தித்தல் மற்றும் கடவுளை தியானிப்பதன் மூலம் கைகூடும்.இவ்வாறு பேசினார்.

ஏற்பாடுகளை சேர்மன் வி.ஜெகநாதன் மேனேஜிங் டிரஸ்டி சீனிவாசன், டிரஸ்டிகள் கணபதிநரசிம்மன், ராமன், ஸ்ரீகுமார், சசிராமன், ஜெயஸ்ரீ, குருராஜன் செய்திருந்தனர். இந்த சொற்பொழிவு மே 1 வரை நடக்கிறது.






      Dinamalar
      Follow us