ADDED : மார் 06, 2025 04:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருப்பூரை சேர்ந்தவர் சரவணன் 29. மதுரையிலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். ஒரு சிறுமியுடன் பழகினார். திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தார். தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
போக்சோ வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
நீதிபதி முத்துக்குமாரவேல்: சரவணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.