ADDED : பிப் 25, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: மன்னாடிமங்கலம், இரும்பாடி இடையே வைகை ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. குருவித்துறை ரோடு பால சந்திப்பில் இரண்டு, வளைவில் ஒன்று என வேகத்தடைகள் இருந்தன.
இதில் வெள்ளை வண்ணம் பூசப்படாததால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத் துறையினர் வெள்ளை வண்ணம் பூசினர்.

