
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் ஆலன் திலக் ஷிட்டோ ரியோ இன்டர்நேஷனல் கராத்தே பள்ளி சார்பில் 9வது தமிழ்நாடு மாநில ஓபன் கராத்தே போட்டி நடந்தது.
இதில் ஆசிய கோஜி-ரியூ கராத்தே நடுவர் பாரத் தலைமையில் மதுரை எப்.எப்.எப்., மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி பள்ளியின் 15 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த அணியினர் 5 தங்கம், 2 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்கள் வென்றனர். போட்டி அமைப்பாளர் ராமமூர்த்தி பரிசு வழங்கினார். அகாடமி தலைவர் கவிக்குமார், நிர்வாகி மனோஜ் பிரபாகரன், பயிற்சியாளர்கள் நிரூபன்ராஜ், மணி, காளிமுத்து பாராட்டினர்.

