நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் ஒன்றியம் கிழவனேரியில் ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் வினியோகிக்கவில்லை.
மோட்டார் பழுதால் தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை திருமங்கலம் - சேடப்பட்டி ரோட்டில் காலி குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
25 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது. போலீசார், ஊராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மோட்டாரை பழுதுநீக்கி தண்ணீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.

