ADDED : ஜூலை 23, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் மானியத்தில் தக்கைப் பூண்டு விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பசுந்தாள் உர விதைகளை நிலத்தில் விதைத்து அவர்களை பூ பூக்கும் முன் அதே நிலத்தில் மடக்கி உழுது அடுத்த சாகுபடி செய்யும் பயிருக்கு உரமாக்க வேண்டும். நிலத்தின் கரிமச்சத்தின் அளவை அதிகரிக்கிறது. விவசாயிகள் புகைப்படம், ஆதார் அட்டை நகல், கணினி சிட்டா உடன் நேரில் வந்து ஈடு பொருட்களை மானிய விலையில் பெறலாம் என வேளாண் உதவி இயக்குனர் விமலா தெரிவித்தார்.
