ADDED : ஆக 12, 2024 10:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : மதுரை நரிமேடு ஜோதி, பேரையூர் தாலுகா சேடபட்டி பிர்காவில் சர்வேயராக பணிபுரிகிறார். இவரிடம் சின்னகட்டளையைச் சேர்ந்த விவசாயி ராமசாமி என்பவர், நில அளவீடு சான்று கேட்டுள்ளார்.
அதற்கு லஞ்சமாக 2,000 ரூபாய் தருமாறு ஜோதி கேட்டார். அதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ராமசாமி புகார் அளித்தார்.
போலீசாரின் ஆலோசனையின்படி நேற்று மதியம் 2:30 மணிக்கு சேடப்பட்டி பஸ் ஸ்டாப்பில், ராமசாமியிடம் 2,000 ரூபாயை ஜோதி வாங்கியபோது டி.எஸ்.பி., சத்தியசீலன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
பேரையூர் தாலுகா அலுவலகத்தில் வேலை செய்து விட்டு, மதியம் 1:30 மணிக்கு வீட்டுக்கு செல்வதாக கூறி உசிலம்பட்டிக்கு பஸ் ஏறினார்.
அலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து சேடப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கி, ராமசாமியிடம் லஞ்சம் பெற்ற போது பிடிபட்டார்.