/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை நிறைவேற்றாமல் உறுதிமொழி எடுத்துள்ள தமிழக அரசு அதிகாரிகள் உயர்நீதிமன்றம் அதிருப்தி
/
ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை நிறைவேற்றாமல் உறுதிமொழி எடுத்துள்ள தமிழக அரசு அதிகாரிகள் உயர்நீதிமன்றம் அதிருப்தி
ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை நிறைவேற்றாமல் உறுதிமொழி எடுத்துள்ள தமிழக அரசு அதிகாரிகள் உயர்நீதிமன்றம் அதிருப்தி
ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை நிறைவேற்றாமல் உறுதிமொழி எடுத்துள்ள தமிழக அரசு அதிகாரிகள் உயர்நீதிமன்றம் அதிருப்தி
ADDED : ஆக 30, 2024 10:54 PM

மதுரை : 'தமிழக அரசு அதிகாரிகள் உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றி அதிகாரிகள் ஒருபோதும் நடவடிக்கை மேற்கொள்வதில்லை,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தியை பதிவு செய்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புத்தாநத்தம் காஜா முகைதீன் தாக்கல் செய்த மனு:
புத்தாநத்தம் பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். ஆக்கிரமிப்பை 12 வாரங்களில் அகற்ற 2023 நவ.,3 ல் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இதை நிறைவேற்றவில்லை. கலெக்டர், ஆர்.டி.ஓ., மணப்பாறை தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், புத்தாநத்தம் ஊராட்சி தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு:
சட்டத்தை நிலைநாட்ட நீதிபதிகள் உறுதிமொழி எடுப்பது போல், தமிழக அரசு அதிகாரிகளும் உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றமாட்டோம் என உறுதிமொழி எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றி அதிகாரிகள் ஒருபோதும் நடவடிக்கை மேற்கொள்வதில்லை. மாநில அரசு ஊழியர்களின் உறுதியான முடிவிற்கு இது சிறந்த உதாரணம்.
இந்நீதிமன்றம் 2023ல் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை. மனுதாரர் அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியபின் இங்கு வழக்கு தாக்கல் செய்தார்.
சிக்கலை உணர்ந்த அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாங்கள் தீவிரமாக இருப்பதாக இந்நீதிமன்றத்தை நம்ப வைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்ற ஆக.,9ல் ஊராட்சி தலைவரால் சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊராட்சி ↔தொடர்ச்சி கடைசி பக்கம்தலைவருக்கு அதிகாரம் இல்லை. வருவாய்த்துறை மூலம் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்நீதிமன்றம் 2023 ல் உத்தரவிட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஊராட்சி தலைவர் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நீதிமன்ற முதன்மை அமர்வு 3 மாதங்களுக்கு ஒருமுறை மாறுகிறது. ஆக்கிரமிப்பு விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை நிரந்தர அமர்வு முன்பாக விசாரணைக்கு பட்டியலிட இது சரியான நேரம். இதனால் தொடர்ந்து கண்காணித்து உத்தரவுகள் பிறப்பிக்க முடியும். எதிர்காலத்தில் அதிகாரிகளின் இதுபோன்ற செயல் மன்னிக்கப்படாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீதிமன்றத்திற்கு வரவழைத்து இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்.
தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டப்படி ஆக்கிரமிப்பாளருக்கு தாசில்தார் நோட்டீஸ் அளிக்க வேண்டும். அவரது விளக்கத்தை பரிசீலித்து தாசில்தார் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விசாரணை அக்.,8க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.