sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டீ கடையில் கவிழ்ந்த டேங்கர் ஒடிசாவில் ஐந்து பேர் பலி

/

டீ கடையில் கவிழ்ந்த டேங்கர் ஒடிசாவில் ஐந்து பேர் பலி

டீ கடையில் கவிழ்ந்த டேங்கர் ஒடிசாவில் ஐந்து பேர் பலி

டீ கடையில் கவிழ்ந்த டேங்கர் ஒடிசாவில் ஐந்து பேர் பலி


ADDED : ஆக 23, 2024 04:25 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெர்ஹாம்பூர்: ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில், பஸ் மீது மோதிய டேங்கர் லாரி சாலையோர டீ கடை மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில், ஐந்து பேர் பலியாகினர்; 12 பேர் காயம் அடைந்தனர்.

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள அஸ்கா நகர் நோக்கி, டேங்கர் லாரி ஒன்று நேற்று காலை வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, பயணியருடன் எதிரே வந்த பஸ் மீது டேங்கர் லாரி மோதியது.

இதைத்தொடர்ந்து அந்த டேங்கர் லாரி அருகேயிருந்த சாலையோர டீகடை மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில், பயணி ஒருவரும், டீக்கடையில் இருந்த மூவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் உயிரிழந்தார். இதனால், பலி ஐந்தாக உயர்ந்தது. இறந்தவர்கள் யார் என இன்னும் அடையாளம் காண முடியவில்லை.

ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us