sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேர், தேங்காய் தொடும் முகூர்த்தம்

/

தேர், தேங்காய் தொடும் முகூர்த்தம்

தேர், தேங்காய் தொடும் முகூர்த்தம்

தேர், தேங்காய் தொடும் முகூர்த்தம்


ADDED : பிப் 24, 2025 03:45 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவுக்கான தேர் முகூர்த்தம், தேங்காய் தொடும் முகூர்த்தம் நேற்று நடந்தது.

கோயிலில் இருந்து தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மாலை, சந்தனம், குங்குமம், மேளதாளத்துடன் ஸ்தானிக சிவாச்சாரியார்கள் அலுவலகம் சென்றனர். உதவி கமிஷனர் சூரிய நாராயணனுக்கு மரியாதை செய்து, தேங்காய், பழம் கொடுக்கப்பட்டது. துணை கமிஷனர் தொட்டுக் கொடுத்தார். அவரிடம் பங்குனி திருவிழா விவரங்கள் அடங்கிய குறிப்புகள் வழங்கப்பட்டு திருவிழா நாட்கள் குறிக்கப்பட்டது.

கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு யாக பூஜை நடந்தது. கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டிருக்கும் பெரிய வைரத்தேரில் உள்ள விநாயகர், பெருமாள், சிவபெருமான், கருப்பணசுவாமி, தராசு முருகனுக்கு தீபாராதனை முடிந்து சுத்தியல், உளிக்கு பூஜை நடந்தது. பங்குனித் திருவிழா மார்ச் 5ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.






      Dinamalar
      Follow us