ADDED : ஆக 22, 2024 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஜவ்வாதுமலை அடிவார கிராமமான துரிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜன், 39, என்பவரின் மகன்கள் கதிரேசன், 6, அகிலேஷ், 5, ஆகியோர் நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே இருந்த ஓடையில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வந்த காட்டாறு வெள்ளத்தில் இருவரும் அடித்து செல்லப்பட்டனர்.
கோவிந்தராஜன் அவர்களை தேடிய நிலையில், நேற்று காலை அகிலேஷ் உடல் அப்பகுதியில் கரை ஒதுங்கியது.
தொடர்ந்து, கதிரேசனை தேடும் பணியில், செங்கம் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.