
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை ஹார்விபட்டி சீனிவாசாநகர் இந்திராநகர் கல்கத்தா காளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பக்தர்கள் பொங்கல் வைத்தும், பால்குடம், பூச்சட்டி, முளைப்பாரி எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். திருவிழா நிறைவாக நேற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

