sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உழவுக்கு கை கொடுக்கும் மழை

/

உழவுக்கு கை கொடுக்கும் மழை

உழவுக்கு கை கொடுக்கும் மழை

உழவுக்கு கை கொடுக்கும் மழை


ADDED : ஆக 12, 2024 03:19 AM

Google News

ADDED : ஆக 12, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதிகளில் பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, உழவுப் பணிகளை துவக்கி உள்ளனர்.

வழக்கமாக விவசாயிகள் ஆடி 18 அன்று நெல் நாற்று பாவுவதும், காய்கறிகள் பயிரிடுவதும் வழக்கம்.

இந்தாண்டு மழை இல்லாததாலும், கண்மாய்கள் வறண்டு கிடப்பதாலும் விவசாயிகள் சாகுபடி பணிகளை துவக்கவில்லை.

விவசாயிகள் கூறுகையில், ''கடந்த ஆண்டுகளில் கண்மாய்களில் தண்ணீர் இருந்ததால் கோடை உழவு செய்து ஆடி 18 ல் பணிகளை துவக்க தயாராக இருந்தோம். மழை பெய்யாததால் பணிகள் துவக்கவில்லை. இந்தாண்டும் மழை பெய்யும் என நம்பிக்கையில் பலர் கோடை உழவு செய்துள்ளனர். ஆடி பதினெட்டு நடவுக்காக விதை நெல்கள், காய்கறிகள் விதைகள் வாங்கி தயாராக இருந்தோம். மழை பெய்யாததாலும் கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் குறைவாக இருப்பதாலும் நாற்றுப் பாவுதல், காய்கறி விதைக்கவும் இல்லை.

சில நாட்களாக பெய்து வரும் மழை உழவுக்கு உதவியாக உள்ளது. பலர் உழவு செய்ய துவங்கியுள்ளனர். பலர் உழவுக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் அடுத்த கட்ட பணிகளை துவக்குவோம் என்றனர்.






      Dinamalar
      Follow us