/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விளையாட்டு வினையானது கழுத்து இறுகி சிறுமி பலி
/
விளையாட்டு வினையானது கழுத்து இறுகி சிறுமி பலி
ADDED : மே 29, 2024 08:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரமங்கலம்:மதுரை மாவட்டம் கல்புளிச்சான்பட்டி ஜவுளி வியாபாரி ரவிராஜ் 35, செல்வி தம்பதி மகன் சஞ்சய் 12, மகள் சாஷிகா 10.
அங்குள்ள பள்ளியில் சாஷிகா 5ம் வகுப்பு படித்தார். நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் துணியில் தொட்டில் கட்டி விளையாடினார். இதில் கழுத்து இறுகி மயங்கினார். அப்பகுதியினர் மீட்டு, விக்கிரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து, சோழவந்தான் மருத்துவமனை எடுத்து செல்லும் வழியில் இறந்தார்.