sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மல்லிகை வாசனையா மது வாசனையா செல்லம்பட்டி விவசாயிகள் வேதனை

/

மல்லிகை வாசனையா மது வாசனையா செல்லம்பட்டி விவசாயிகள் வேதனை

மல்லிகை வாசனையா மது வாசனையா செல்லம்பட்டி விவசாயிகள் வேதனை

மல்லிகை வாசனையா மது வாசனையா செல்லம்பட்டி விவசாயிகள் வேதனை


ADDED : பிப் 23, 2025 04:53 AM

Google News

ADDED : பிப் 23, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : செல்லம்பட்டி எரவார்பட்டியில் புதிய மது கடை அமைப்பதற்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கலெக்டர் சங்கீதாவிடம் செல்லம்பட்டி பகுதி மக்கள் கையெழுத்திட்டு மனு கொடுத்துள்ளனர். விவசாயிகள் பாண்டி, ராமன், இளங்கோவன், அறிவழகன், ஜெயக்குமார், கருப்பசாமி, பெரியசாமி, சின்னத்தம்பி, வீரபாண்டி, வீருச்சாமி கூறியதாவது:

உசிலம்பட்டி பகுதி மதுக்கடையை எரவார்பட்டிக்கு மாற்ற டாஸ்மாக் மண்டல மேலாளர் இடத்தை ஆய்வு செய்துள்ளார். விக்கிரமங்கலம், உத்தப்பநாயக்கனுார் பகுதி கிராமங்களில் ரோஜா, மல்லிகை, சம்பங்கி, செவ்வந்திபூ சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளோம். விவசாய கூலிகள் இங்கு அதிகம். 15 கி.மீ., துாரம் வரை மது கடைகளே இல்லாத நிலையில் புதிதாக கடை திறந்தால் விவசாயிகள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவர்.

இங்கிருந்து தெற்காசியா முழுவதும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விவசாயிகள், கூலியாட்கள் குடிக்கு அடிமையானால் பூக்கள் சாகுபடி அழியும். ரவுடிகளின் தொல்லை அதிகரித்து கிராமங்கள் அமைதியிழந்து விடும்.

இதுகுறித்து கலெக்டர் சங்கீதாவிடம் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்துள்ளோம். பூக்கள் வாசனை வீசும் இப்பகுதியில் மது வாசனை வீசுவதை ஏற்கமுடியாது என்றனர்.






      Dinamalar
      Follow us