ADDED : ஜூலை 16, 2024 04:18 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை அனுப்பானடி நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.
யாக கும்ப பூஜைகளை தொடர்ந்து 16 வகையான மகா அபிஷேகங்கள், அலங்கார பூஜை நடந்தது. சிவகாமி அம்மனுக்கு மங்கல நாண் சூட்டப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
கும்ப பூஜையை அர்ச்சகர் விஜய சடகோபன் நடத்தினார். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகி ராஜமாணிக்கம் செய்திருந்தார்.
