sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

லாரி மீது கார் மோதல் ம.தி.மு.க., நிர்வாகிகள் மூன்று பேர் பரிதாப பலி

/

லாரி மீது கார் மோதல் ம.தி.மு.க., நிர்வாகிகள் மூன்று பேர் பரிதாப பலி

லாரி மீது கார் மோதல் ம.தி.மு.க., நிர்வாகிகள் மூன்று பேர் பரிதாப பலி

லாரி மீது கார் மோதல் ம.தி.மு.க., நிர்வாகிகள் மூன்று பேர் பரிதாப பலி


ADDED : ஆக 05, 2024 11:28 PM

Google News

ADDED : ஆக 05, 2024 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்:மதுரை காமராஜர்புரம் பச்சைமுத்து, 50, ம.தி.மு.க., மாநில தொண்டர் அணி துணை அமைப்பாளர். இவர் நேற்று முன்தினம் சென்னையில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள, தன் சகோதரர் அமிர்தராஜ், 44, புலிசேகர், 36, உறுப்பினர் பிரபாகரன், 40, உள்ளிட்ட கட்சியினருடன் சென்றார்.

கூட்டம் முடிந்து, மதுரைக்கு திரும்பிய பச்சை முத்து, சென்னையில் மகள் வீட்டில் இருந்த மனைவி வளர்மதியை, 45, உடன் அழைத்து வந்தார். காரை அமிர்தராஜ் ஒட்டினார். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மேலுார், சிட்டம்பட்டி டோல்கேட் அருகே சென்ற போது, ரோட்டோரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது கார் மோதியது.

இதில் காரில் பயணம் செய்த பச்சைமுத்து, அமிர்தராஜ், புலிசேகர் இறந்தனர். வளர்மதி மற்றும் பிரபாகரன், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us