sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையை ஆளும் மீனாட்சியை சொக்க வைத்த சொக்கநாதர் கோலாகலமாக நடந்தது திருக்கல்யாணம் ; இன்று தேரோட்டம்

/

மதுரையை ஆளும் மீனாட்சியை சொக்க வைத்த சொக்கநாதர் கோலாகலமாக நடந்தது திருக்கல்யாணம் ; இன்று தேரோட்டம்

மதுரையை ஆளும் மீனாட்சியை சொக்க வைத்த சொக்கநாதர் கோலாகலமாக நடந்தது திருக்கல்யாணம் ; இன்று தேரோட்டம்

மதுரையை ஆளும் மீனாட்சியை சொக்க வைத்த சொக்கநாதர் கோலாகலமாக நடந்தது திருக்கல்யாணம் ; இன்று தேரோட்டம்


ADDED : ஏப் 22, 2024 05:27 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று விமரிசையாக நடந்தது.

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா மீனாட்சி அம்மன் கோயிலில் ஏப்.12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.19 அம்மனுக்கு பட்டாபிேஷகம், ஏப்.20ல் திக்குவிஜயமும் நடந்தது. நேற்று திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.

அம்மனும், சுவாமியும் சர்வ அலங்காரத்தில் ஆடி, சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். காலை 8:00 மணிக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள மலர்கள், 500 கிலோ பழங்கள், ஸ்ரீவில்லிபுத்துார் கிளி, நவதானிய பெயர் பலகையால் அலங்கரிக்கப்பட்ட மண மேடையில் சுவாமி, அம்மன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினர்.

தங்க அங்கி


சுவாமிக்கான திருமண சடங்கை செந்தில் பட்டரும், அம்மனுக்கான திருமண சடங்கை ஹாலாஸ் பட்டரும் நடத்தினர். காலை 8:51 மணிக்கு வேதமந்திரங்கள் ஒலிக்க, பெருமாள் தாரை வார்த்து கொடுக்க மீனாட்சிக்கு வைரத்திலான திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாணத்தின்போது மட்டுமே அணிவிக்கப்படும் தங்க அங்கியுடன் அம்மன் உற்ஸவம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 1823ல் முன்னோர்களால் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தீபாராதனை தட்டு மூலம் அம்மனுக்கும், சுவாமிக்கும் தீபாராதனை காட்டப்பட்டது.

300 ஆண்டுகள் பழமையான தங்க சந்தன கும்பா, பன்னீர் தெளிப்பு கும்பா மூலம் பன்னீர் தெளிக்கப்பட்டது.

திருக்கல்யாணத்தை தொடர்ந்து பெண் பக்தர்களுக்கு அவர்களது கணவர்கள் தாலி கட்டினர். பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டனர். பக்தர்கள் ஆன்லைன் மூலம் மொய் செலுத்தினர்.

சேதுபதி பள்ளியில் பழமுதிர்சோலை திருவருள் முருக பக்த டிரஸ்ட் சார்பில் திருமண விருந்து நடந்தது. திருமணத்திற்கு பின் அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண அலங்காரத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.

இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பூப்பல்லக்கிலும் வீதி உலா வந்தனர். இன்று காலை 6:00 மணிக்கு மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது.

இன்று எதிர்சேவை


இதற்கிடையே மதுரை வைகையாற்றில் எழுந்தருள நேற்று மாலை அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்பட்டார். இன்று மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது.

நாளை அதிகாலை 5:51 மணி முதல் 6:10 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

பக்தர்கள், பட்டர்கள் அதிருப்தி

திருக்கல்யாணத்தின்போது சித்திரை வீதிகளில் மாப்பிள்ளை அழைப்பு நடக்கும். இதைக் காண பக்தர்கள் கூடுவர். கெடுபிடி காரணமாக கோயிலுக்குள் செல்லாமல் சித்திரை வீதியிலேயே அம்மனையும், சுவாமியையும் இவர்கள் தரிசித்துவிட்டு செல்வர். நேற்று அதற்கும் 'பாதுகாப்பு' என்ற பெயரில் போலீசார் தடைவிதித்தனர். சித்திரை வீதியில் நின்று தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 'மக்களுக்காகதான் திருவிழா நடத்தப்படுகிறது. அவர்களை சித்திரை வீதியில்கூட அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது' என ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.இதில் பங்கேற்கும் பட்டர்கள் கடும் விரதமிருந்து சடங்கு செய்து திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பர். எவ்வித குழப்பமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்ட பட்டர்கள் அனைவரும் மணமேடையில் இருப்பர். இது காலம் காலமாக இருக்கும் நடைமுறை. ஆனால் நேற்று பட்டர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறி அவர்களை மேடையில் இறங்குமாறு அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் பட்டர்கள் அதிருப்தி அடைந்தனர். அதிகாரிகளின் வற்புறுத்தலால் மேடைக்கு பின்புறம் நின்றனர்.



வி.ஐ.பி.,க்கள் அதிகம்

ரூ.500 டிக்கெட் பெற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் வி.ஐ.பி.,க்கள், அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர். 'ஹவுஸ்புல்' ஆனதால் டிக்கெட் இருந்தும் பக்தர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் நின்று தரிசிக்க வேண்டிய நிலைக்கு ஆளாயினர். வரும் ஆண்டுகளில் பக்தர்களை அனுமதிக்காமல் வி.ஐ.பி.,க்கள், அவர்களை சார்ந்தவர்களை மட்டுமே வைத்து திருக்கல்யாணத்தை நடத்தினாலும் ஆச்சரியமில்லை என பக்தர்கள் குமுறினர்.








      Dinamalar
      Follow us