/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் இன்று தினமலர் சார்பில் கண், மனநலம் காக்கும் கருத்தரங்கு
/
மதுரையில் இன்று தினமலர் சார்பில் கண், மனநலம் காக்கும் கருத்தரங்கு
மதுரையில் இன்று தினமலர் சார்பில் கண், மனநலம் காக்கும் கருத்தரங்கு
மதுரையில் இன்று தினமலர் சார்பில் கண், மனநலம் காக்கும் கருத்தரங்கு
ADDED : செப் 01, 2024 03:38 AM
மதுரை : தினமலர் நாளிதழ் சார்பில் பள்ளிக் குழந்தைகள், அம்மாக்களுக்காக கண், மனநலம் காப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் இன்று (செப்.1) காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை நடக்கிறது.
மக்கள் நலனில் அக்கறையுடன் தினமலர் நாளிதழ் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் நலன், சமூக நலன் சார்ந்து பயனுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் பள்ளிக் குழந்தைகள், அம்மாக்களுக்காக இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் 'பள்ளிக் குழந்தைகளின் கண்களை கவனமாக காப்பது எப்படி' என்ற தலைப்பில் ஸ்ரீராம்சந்திரா கிளினிக் கண் சிறப்பு நிபுணர் டாக்டர் எஸ்.சீனிவாசன்,'தனித்திறன்களை வளர்த்து படிப்பில் சாதிப்பது எப்படி' என ஹர்ஷா மருத்துவமனை மனநல நிபுணர் டாக்டர் எஸ்.சிவசங்கரி, 'தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி' என்ற தலைப்பில் எம்.எஸ்., செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் எம்.கண்ணன் ஆகியோர் பேசுகின்றனர்.
அம்மாக்களே குழந்தைகளுடன் வாருங்கள். இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்று நல்ல பல பயனுள்ள தகவல்களை கேளுங்கள். அனுமதி இலவசம்.