ADDED : செப் 06, 2024 05:13 AM
மதுரை: குலமங்கலத்தில் விதைச்சான்று துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் தரமான விதை உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சான்று பெற்ற விதைகள், மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து வேளாண் துணை இயக்குநர் அமுதன், விதைச்சான்றளிப்பு குறித்து உதவி இயக்குநர் சிங்காரலீனா, பயறு வகைகளில் விதை உற்பத்தி குறித்து மதுரை வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர் ஆனந்த், விதைப் பண்ணை பதிவு செய்யும் நடைமுறை குறித்து விதைச்சான்று அலுவலர் கண்ணன் ஆகியோர் பேசினர். வேளாண் உதவி இயக்குநர் பாலமுருகன், வேளாண் அலுவலர் நாராயணசாமி, துணை அலுவலர் வரதராஜன், விதைச்சான்று அலுவலர் நித்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
உதவி வேளாண் அலுவலர் ஆனந்தகுமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜசேகர், உதவி மேலாளர்கள் பாலமுருகன், சுஜிதா ஏற்பாடுகளை செய்தனர்.