ADDED : ஜூலை 12, 2024 04:42 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் முதலாண்டு மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடந்தது. நிறைவு விழாவில் கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார்.
சுயநிதி பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தார். வணிக மேலாண்மை துறை உதவி பேராசிரியர் நிரஞ்சனி வரவேற்றார். மாணவர்களுக்கு பல்வேறு தொழில் நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டது. திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.
