sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாற்று துறைகளில் ஆய்வு நடத்த உதயநிதிக்கு அதிகாரம் உள்ளதா உதயகுமார் கேள்வி

/

மாற்று துறைகளில் ஆய்வு நடத்த உதயநிதிக்கு அதிகாரம் உள்ளதா உதயகுமார் கேள்வி

மாற்று துறைகளில் ஆய்வு நடத்த உதயநிதிக்கு அதிகாரம் உள்ளதா உதயகுமார் கேள்வி

மாற்று துறைகளில் ஆய்வு நடத்த உதயநிதிக்கு அதிகாரம் உள்ளதா உதயகுமார் கேள்வி


ADDED : செப் 13, 2024 05:26 AM

Google News

ADDED : செப் 13, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: 'தமிழக முதல்வரின் மகன் என்பதால் மாற்றுத் துறைகளில் ஆய்வு நடத்த அதிகாரம் உள்ளதா' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் டி.புதுப்பட்டியில் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன் தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:

மதுரை, சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி மாற்றுத் துறைகளில் ஆய்வு செய்து அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார். சிலரை பணிநீக்கம் செய்துள்ளார். அனைத்து துறைகளையும் ஆய்வு செய்ய முதலமைச்சருக்கு அதிகாரம் உள்ளது. சிறப்பு திட்ட செயலாக்க துறையில் அனைத்து துறையையும் ஆய்வு செய்கிற ஏமாற்று வேலையை செய்கின்றனர். இரண்டு அதிகாரிகளை பணி நீக்கம் செய்கிறார். இது என்ன சர்வாதிகார நாடா.அனைத்து துறைகளையும் ஆய்வு செய்ய, மாவட்ட ஆட்சியராக இருக்க வேண்டும் அல்லது முதல்வராக இருக்க வேண்டும்.

அ.தி.மு.க., வின் 10 ஆண்டு ஆட்சியில் 24 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு 12 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கியவர், அ.தி.மு.க., ஆட்சியில் இப்படி வழங்கினரா என கேட்டுள்ளார். அ.தி.மு.க., வழங்கியது குறித்து வருவாய் துறை மானிய கோரிக்கையில் உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us