sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆளுங்கட்சியை வசைபாடாமல் அ.தி.மு.க., பற்றி குறைகூறுவதா அண்ணாமலைக்கு உதயகுமார் கண்டனம்

/

ஆளுங்கட்சியை வசைபாடாமல் அ.தி.மு.க., பற்றி குறைகூறுவதா அண்ணாமலைக்கு உதயகுமார் கண்டனம்

ஆளுங்கட்சியை வசைபாடாமல் அ.தி.மு.க., பற்றி குறைகூறுவதா அண்ணாமலைக்கு உதயகுமார் கண்டனம்

ஆளுங்கட்சியை வசைபாடாமல் அ.தி.மு.க., பற்றி குறைகூறுவதா அண்ணாமலைக்கு உதயகுமார் கண்டனம்


ADDED : ஜூன் 01, 2024 04:55 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: 'தமிழகத்தில் காய்கறிகளை அள்ளி வாங்கிய நிலை மாறி எண்ணி வாங்கும் அளவுக்கு விலைவாசி உயர்ந்து உள்ளது' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.

பேரையூர் தாலுகா டி.குன்னத்துார் அம்மா கோயிலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.

இதில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் காய்கறிகளை அள்ளி வாங்கிய நிலை மாறி எண்ணி வாங்கும் அளவு விலைவாசி ஏறி இருக்கிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் அரசு துாங்கிக் கொண்டிருக்கிறது.

பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஆட்சி அதிகாரத்தை வைத்து எல்லோரையும் வசை பாடுவதையே வேலையாக வைத்துள்ளார். அவர்கள் மக்களுக்கு ஆற்றிய சேவையை பட்டியலிட்டால், அது உண்மை என்று நிரூபித்தால்... நீங்கள் அ.தி.மு.க.,வின் இடத்தை பிடிக்க தேவையில்லை... மக்களே அந்த இடத்தை உங்களுக்குத்தர தயாராக இருப்பர்.

அதை விடுத்து, ஆளும் கட்சியை வசைபாடாமல், ஆட்சியில் இல்லாத அ.தி.மு.க., வை அழிக்க பார்ப்பதும், தொண்டர்களுக்கு மனஉளைச்சல் தருவதுடன், எங்கள் தலைவர்கள் பற்றி வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அவ்வாறு பேசுவதை விட்டு விட்டு தி.மு.க., ஆட்சியின் சீர்கேடை எடுத்துக் கூறுங்கள் என்றார்.






      Dinamalar
      Follow us