/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இடைத்தேர்தல்களை புறக்கணித்த தி.மு.க., அழிந்தா போய்விட்டது தினகரன், ஆர்.எஸ்.பாரதிக்கு உதயகுமார் பதிலடி
/
இடைத்தேர்தல்களை புறக்கணித்த தி.மு.க., அழிந்தா போய்விட்டது தினகரன், ஆர்.எஸ்.பாரதிக்கு உதயகுமார் பதிலடி
இடைத்தேர்தல்களை புறக்கணித்த தி.மு.க., அழிந்தா போய்விட்டது தினகரன், ஆர்.எஸ்.பாரதிக்கு உதயகுமார் பதிலடி
இடைத்தேர்தல்களை புறக்கணித்த தி.மு.க., அழிந்தா போய்விட்டது தினகரன், ஆர்.எஸ்.பாரதிக்கு உதயகுமார் பதிலடி
ADDED : ஜூன் 19, 2024 04:45 AM
மதுரை : ''தோல்லி பயத்தால் தான் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடவில்லை எனக்கூறி கட்சிக்கு பின்னடவை ஏற்படுத்துவதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். புதுக்கோட்டை, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை புறக்கணித்த தி.மு.க., அழிந்து போய்விட்டதா'' என எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடாதது குறித்து தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் விமர்சித்தனர். இதற்கு பதிலடியாக உதயகுமார் மதுரையில் நேற்று கூறியதாவது:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடாத காரணம் குறித்து பொதுச்செயலாளர் பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார். இருந்தபோதிலும் தொடர்ந்து அவதுாறு கருத்துக்களை பரப்பி அதன் மூலமாக அ.தி.மு.க.,விற்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்பதை தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.
அ.தி.மு.க., பல ஆண்டுகளாக பல தேர்தலை சந்தித்து இருக்கிறது. தொடர் வெற்றியை பெற்ற எம்.ஜி.ஆர்., தலைமையில் கூட 2 எம்.பி.,க்கள் இருந்த காலம் உண்டு.
புதுக்கோட்டை இடைத்தேர்தலை தி.மு.க., புறக்கணிக்கிறது என கருணாநிதி சொன்ன பிறகு அக்கட்சி அழிந்து போய்விட்டதா. சூழ்நிலைக்கு ஏற்க கட்சி நிலைப்பாட்டை அறிவிப்பது என்பது தலைவர்களின் ராஜதந்திரம் என்பதை மக்கள் அறிவர். பழனிசாமி தொலைநோக்கு சிந்தனையோடு 2026 இலக்காக வைத்து அறிவித்தது தான் தேர்தல் புறக்கணிப்பு. இது ஒன்றும் தேசவிரோதம் இல்ல. இவ்வாறு கூறினார்.