ADDED : ஆக 22, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஊரக வளர்ச்சித்துறையில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் (ஆக.22, 23) ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடக்கிறது. காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இதனால் மதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடும்.
கிராமங்களில் வீடுகட்டும் திட்டப் பணிகள், கண்மாய் பணிகள், நுாறுநாள் வேலை திட்டம், ஒப்பந்ததாரர்களுக்கு நிதிஅளிப்பது உள்ளிட்ட பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது.