நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை விளாச்சேரி ஐஸ்வர்யம் அறக்கட்டளையில் மதுரை ஜெம்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் முதியோர் நலத்திட்ட விழா நடந்தது.
ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் டாக்டர் பாலகுருசாமி முன்னிலை வகித்தார். முதியோர்களுக்கு தேவையான ஆடைகள், உபகரணங்கள், உணவு வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் ஆதி முத்துப்பாண்டி, செயலாளர் ஜெய ராஜசேகரன், பொருளாளர் குப்புராஜ் ஏற்பாடுகளை செய்தனர்.

