sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வடமாநில பிரசாரத்திற்கு ஸ்டாலின் ஏன் செல்லவில்லை: ராஜன்செல்லப்பா கேள்வி

/

வடமாநில பிரசாரத்திற்கு ஸ்டாலின் ஏன் செல்லவில்லை: ராஜன்செல்லப்பா கேள்வி

வடமாநில பிரசாரத்திற்கு ஸ்டாலின் ஏன் செல்லவில்லை: ராஜன்செல்லப்பா கேள்வி

வடமாநில பிரசாரத்திற்கு ஸ்டாலின் ஏன் செல்லவில்லை: ராஜன்செல்லப்பா கேள்வி


ADDED : ஏப் 30, 2024 05:31 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் முருகன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயலர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., துவக்கி வைத்து கூறியதாவது: 'இண்டியா' கூட்டணியில் உள்ள ஸ்டாலின் வடமாநிலங்களில் பிரசாரத்துக்கு செல்லவில்லை. காரணம் அவர்கள் வெற்றி பெற முடியாது. இதனால் கொடைக்கானல் சென்றுள்ளார். தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆளுங்கட்சி நிர்வாகிகள்தான் கஞ்சா கடத்தலில் ஈடுபடுகின்றனர். மணல் கடத்தல், கள்ள மது விற்பது குறித்து தகவல் சொல்லும் சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகிறார்கள். ரகசியத்தை பாதுகாக்க வேண்டிய போலீசார் கருப்பு ஆடு போல் செயல்படுகிறார்கள். தமிழகத்தில் கடும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது என்றார். நிர்வாகிகள் முருகேசன், பாலமுருகன், செல்வக்குமார், மோகன்தாஸ் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us