
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நேற்று வருடாபிஷேகம் நடந்தது.
காலையில் கணபதி ஹோமம், ருத்ர ஹோமம் செய்து, மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
கோவில் அர்ச்சகர் சங்கரநாராயண பட்டர் குழுவினர் பூஜைகளை செய்தனர். நிர்வாக அதிகாரி அங்கயற்கண்ணி, தக்கார் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

