ADDED : மே 29, 2025 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் நேற்று17 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரோந்துப்பணியில் ஈடுபட்ட ரயில்வே போலீசார்,அதிகாலை 1:15 மணிக்கு மதுரை வந்த புருலியா - திருநெல்வேலி ரயிலில் (22605) சோதனையிட்டனர். அதன் பொதுப் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 2பைகளில் 17 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிந்தது. அவற்றைபறிமுதல் செய்து மாவட்டபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜாங்கத்திடம் ஒப்படைத்தனர்.