sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விண்ணப்பித்ததோ 17,629 பேர்; தேர்வு செய்யப்பட்டதோ 2295 பேர் ஏ.ஏ.பி.சி.எஸ்., திட்டத்தில் 85 சதவீதம் மனுக்கள் தள்ளுபடி

/

விண்ணப்பித்ததோ 17,629 பேர்; தேர்வு செய்யப்பட்டதோ 2295 பேர் ஏ.ஏ.பி.சி.எஸ்., திட்டத்தில் 85 சதவீதம் மனுக்கள் தள்ளுபடி

விண்ணப்பித்ததோ 17,629 பேர்; தேர்வு செய்யப்பட்டதோ 2295 பேர் ஏ.ஏ.பி.சி.எஸ்., திட்டத்தில் 85 சதவீதம் மனுக்கள் தள்ளுபடி

விண்ணப்பித்ததோ 17,629 பேர்; தேர்வு செய்யப்பட்டதோ 2295 பேர் ஏ.ஏ.பி.சி.எஸ்., திட்டத்தில் 85 சதவீதம் மனுக்கள் தள்ளுபடி


ADDED : மார் 27, 2025 06:16 AM

Google News

ADDED : மார் 27, 2025 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழகத்தில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் தொழில் துவங்க விண்ணப்பித்த 17, 629 பேரில் நிதி பற்றாக்குறையால் 2295 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 2023-24ம் நிதியாண்டில் இருந்து 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' என்னும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் கருவிகள், இயந்திரங்களை கொள்முதல் செய்ய 35 சதவீதம் மூலதன மானியமும், 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின்கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2023-24ம் நிதியாண்டில் இருந்து 21 மாத காலக்கட்டத்தில் 17,629 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2295 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது. மதுரை சமூக ஆர்வலர் கார்த்திக் இதுகுறித்து தகவல்களை பெற்றுள்ளார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 1032 பேர் விண்ணப்பித்த நிலையில் 135 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 பேரும், தேனியில் 10 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இத்திட்டம் அனைவருக்கும் சென்றடையும் வகையில் கூடுதல் நிதியாக ரூ.500 கோடி வரை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆண்டுக்கு 10 ஆயிரம் பயனாளர்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும். விண்ணப்பம் நிராகரிப்பின் காரணங்களை அறிய குழு அமைக்க வேண்டும். நிராகரிக்கப்பட்ட காரணங்களை இணையதளத்தில் 'அப்லோடு' செய்ய வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us