/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பத்திரம் பதிய ரூ.20 ஆயிரம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட 2 பேர் கைது
/
பத்திரம் பதிய ரூ.20 ஆயிரம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட 2 பேர் கைது
பத்திரம் பதிய ரூ.20 ஆயிரம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட 2 பேர் கைது
பத்திரம் பதிய ரூ.20 ஆயிரம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட 2 பேர் கைது
ADDED : ஜன 29, 2025 05:12 AM

உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சொத்து பத்திரம் பதிய ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் சார்பதிவாளர்(பொறுப்பு) ஜியாவுதீன் 47, பத்திர எழுத்தரின் உதவியாளர் எடிசன் 27, கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுார் டி.செட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் மகாராஜா 32. இவரது தாத்தா, பாட்டி பெயரில் 4 சென்ட் இடம் தொட்டப்பநாயக்கனுாரில் உள்ளது. தந்தை அழகப்பனுடன் பிறந்தவர்களிடம் பேசி பாகப்பிரிவினை செய்து, அதை உசிலம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிய அணுகினார். சார்பதிவாளர் (பொறுப்பு) ஜியாவுதீன் ரூ.40 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். மகாராஜா தயங்கியதால் ரூ.20 ஆயிரம் தந்தால் போதும் என்றார்.
லஞ்சஒழிப்பு போலீசில் மகாராஜா புகார் செய்தார். போலீஸ் அறிவுரைப்படி, நேற்று மதியம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜியாவுதீனிடம் ரூ.20 ஆயிரம் கொடுத்தபோது அதை அங்கிருந்த பத்திர எழுத்தர் ராஜேந்திரனின் உதவியாளர் எடிசனிடம் கொடுக்குமாறு கூறினார். அங்கிருந்த பதிவேடு அறைக்கு மகாராஜாவை அழைத்துச்சென்று எடிசன் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றார்.
இதைதொடர்ந்து வெளியே வந்த மகாராஜா 'சிக்னல்' கொடுத்ததும், டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாரதிப்ரியா, சூரியகலா, குமரகுருபரன் தலைமையிலான போலீசார் உள்ளே வந்தனர். எடிசனின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்து அவரையும், ஜியாவுதீனையும் கைது செய்தனர்.

