ADDED : பிப் 11, 2026 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் வருவாய்த்துறை கூட்டமைப்பின் சார்பில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் அனைத்துநிலை வருவாய் அலுவலர்களுக்கும் உழைப்புக்கேற்ற மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அலுவலக உதவியாளர் முதல், தாசில்தார் வரை பங்கேற்றனர். போராட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகைதீன் அப்துல்காதர், ரகுபதி, ஜெயபாஸ்கர், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். இருநுாறுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

