sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் சத்துணவு திட்டத்தில் 2213 காலியிடங்களால் வேலைப்பளு ஊழியர்கள் திணறல்

/

மதுரையில் சத்துணவு திட்டத்தில் 2213 காலியிடங்களால் வேலைப்பளு ஊழியர்கள் திணறல்

மதுரையில் சத்துணவு திட்டத்தில் 2213 காலியிடங்களால் வேலைப்பளு ஊழியர்கள் திணறல்

மதுரையில் சத்துணவு திட்டத்தில் 2213 காலியிடங்களால் வேலைப்பளு ஊழியர்கள் திணறல்


ADDED : பிப் 17, 2025 04:57 AM

Google News

ADDED : பிப் 17, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்ட சத்துணவுத் திட்டத்தில் அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர் பணியிடங்கள் 4256ல் 2213 இடங்கள் காலியாக உள்ளதால் வேலைப்பளுவால் ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

தமிழகத்தில் சத்துணவு திட்டம் 1 முதல் 10ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு மையத்தில் தலா ஒரு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என உள்ளனர். இவ்வகையில் அமைப்பாளர்கள் 1410, சமையலர்கள் 1424, உதவியாளர்கள் 1422 என மாவட்டத்தில் மொத்தம் 4256 பணியிடங்கள் உள்ளன.

இதில் அமைப்பாளர் 846, சமையலர் 435, உதவியாளர்கள் 932 பணியிடங்கள் என மொத்த இடங்களில் ஐம்பது சதவீதம் காலியாக உள்ளன. சென்ற 2017 முதல் இந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளதால் ஒரு மைய அமைப்பாளரே ஐந்தாறு மையங்களை கவனிக்க வேண்டியுள்ளது. சமையலர்கள் அவ்வாறு கவனிக்க இயலாது என்பதால் அவர்களே சொந்த செலவில் ஆட்களை வைத்து சமையல் செய்தோ அல்லது ஒரு மையத்தில் இரு மையங்களுக்கான சமையல் செய்தோ நிலைமையை சமாளிக்கின்றனர். இதனால் ஊழியர்கள் கடும் மனஉளைச்சலில் உள்ளனர்.

அ.தி.மு.க., ஆட்சியின்போதே காலியிடங்களை நிரப்ப இருமுறை மாவட்ட நிர்வாகத்தால் நேர்காணல் கூட நடத்தினர். அது செயல்பாட்டுக்கு வராமல் போனது. 2023 ஜூனில் சென்னை உண்ணாவிரத போராட்டத்தின் போது ஊழியர்களை 15 நாட்களில் நியமிப்பாம் என அமைச்சர்கள், அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அதுவும் நடைமுறைக்கு வரவில்லை.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரபாண்டி கூறியதாவது: அமைச்சர் அளவில் உறுதிமொழி தந்தும் நிறைவேறவில்லை. ஒருவரே பல மையங்களை கவனிப்பதால் வேலைப்பளுவால் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் 8900 பேரை மீண்டும் தொகுப்பூதியத்தில் நியமிக்க உள்ளதாக கூறுகின்றனர். அதற்கும் வழக்கு நிலுவையில் உள்ளதால் நியமனம் தாமதமாகிறது என்றார்.






      Dinamalar
      Follow us