sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நான்கு வழிச்சாலையில் 3 மேம்பாலங்கள்

/

நான்கு வழிச்சாலையில் 3 மேம்பாலங்கள்

நான்கு வழிச்சாலையில் 3 மேம்பாலங்கள்

நான்கு வழிச்சாலையில் 3 மேம்பாலங்கள்


ADDED : ஏப் 24, 2025 05:54 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை அருகே நான்கு வழிச்சாலையில் ரூ.98 கோடி மதிப்பில் 3 புதிய மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

காஷ்மீர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை மதுரை வழியாக செல்கிறது. இந்த ரோட்டில் பல இடங்களில் கிராமச் சாலைகள் சந்திக்கும் இடங்களில் மேம்பாலங்கள் தேவைப்படுகிறது.

இதில் மதுரை அருகே தனக்கன்குளம் பகுதி, திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை, அதையடுத்துள்ள கள்ளிக்குடியில் மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) ஏற்பாடு செய்துள்ளது.

சந்திப்பு பகுதிகளில் 3 ஆண்டுகளில் 5 பேருக்கு மேல் இறந்தால் அப்பகுதியை 'பிளாக் ஸ்பாட்' என்று வகைப்படுத்துகின்றனர். அந்த இடங்களில் மேம்பாலம் அமைக்க நகாய் ஏற்பாடு செய்யும். அந்த வகையில் மேற்கண்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் தனக்கன்குளம் பகுதியில் ரூ.43 கோடியிலும், சிவரக்கோட்டையில் ரூ.26 கோடி, கள்ளிக்குடியில் ரூ.29 கோடி மதிப்பீட்டிலும் பாலங்கள் அமைய உள்ளன. தனக்கன்குளம் பகுதியில் அதிக போக்குவரத்து உள்ளதால் 6 வழிச்சாலையாகவும், மற்ற இடங்களில் 4 வழிச்சாலையாகவும் அமையும். தனக்கன்குளம் பகுதியில் இதற்காக நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இப்பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us