sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கல் குவாரிக்கு எதிர்ப்பு 380 பேர் கைது

/

கல் குவாரிக்கு எதிர்ப்பு 380 பேர் கைது

கல் குவாரிக்கு எதிர்ப்பு 380 பேர் கைது

கல் குவாரிக்கு எதிர்ப்பு 380 பேர் கைது


ADDED : அக் 04, 2025 02:47 AM

Google News

ADDED : அக் 04, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:கல் குவாரிக்கு எதிராக போராடிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் உட்பட 380 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் விதிமீறி கல் குவாரிகளில் வெடி வைத்து தகர்ப்பதால், வீடுகளில் விரிசல் ஏற்படுவதோடு,

மண், துகள்கள், முதியோர், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், குவாரியை மூட வேண்டும் என, போராடி வரும் அப்பகுதி மக்கள், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி நேற்று சென்றனர்.

திரண்டு வந்த அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பே, போலீசார் தடுத்தனர். இதனால் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். இதையடுத்து, கலெக்டர் அலுவலக கேட் பூட்டப்பட்டது.

சாலையில் அமர்ந்து போராடிய நான்கு பெண்கள் மயங்கியதால், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின், பேச்சு நடத்த வருவாய்த் துறை அதிகாரிகள் சென்றனர். பொதுமக்கள் போராட்டத்தை கைவிடாததை அடுத்து, உதயகுமார் உட்பட 380 பேர் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us