ADDED : அக் 09, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் மேயர் முத்துபாலம் அருகே கஞ்சா கடத்துவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., முத்துமணி தலைமையில் போலீசார் அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டு, காரிலும், பைக்கிலும் கடத்திய கும்பலை பிடித்தனர்.
ராமநாதபுரம் சாயல்குடி பிரனேஷ் 24, திருப்புவனம் கார்த்தி 26, மதுரை முத்துப்பட்டி ஹரி கிருஷ்ணன் 20, ராகுல் பாண்டியன் 19, பூபதி ராஜா 20 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சா, 2 பைக்குகள், 6 அலைபேசிகள், ஒரு கார் பறிமுதல் செய்யப் பட்டன.