sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரேஷன் பொருள் கடத்தல் 6272 பேர் கைது; 70 பேருக்கு குண்டாஸ்

/

ரேஷன் பொருள் கடத்தல் 6272 பேர் கைது; 70 பேருக்கு குண்டாஸ்

ரேஷன் பொருள் கடத்தல் 6272 பேர் கைது; 70 பேருக்கு குண்டாஸ்

ரேஷன் பொருள் கடத்தல் 6272 பேர் கைது; 70 பேருக்கு குண்டாஸ்


ADDED : ஆக 03, 2025 04:56 AM

Google News

ADDED : ஆக 03, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் உணவுப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6272 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை ஐ.ஜி., ரூபேஷ்குமார் மீனா, எஸ்.பி., சீனிவாச பெருமாள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது: இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை ரேஷன் பொருட்கள் கடத்தல், முறைகேடாக காஸ் சிலிண்டர் பயன்படுத்தியது என 6025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 2342 டன் ரேஷன் அரிசி, 13,720 லிட்டர் மண்ணெண்ணெய், 1725 காஸ் சிலிண்டர்கள் மற்றும் இதர 64 வழக்குகளுடன் அத்தியாவசியப் பண்டங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ. ரூ.1.81 கோடி.

இக்குற்றங்களில் ஈடுபட்ட 6272 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1362 கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் 2880 வாகனங்கள் அரசுக்கு அபராதத் தொகை செலுத்திய பின் விடுவிக்கப்பட்டன. 70 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல், பதுக்கல் தொடர்பாக மக்கள் 1800 599 5950 என்ற இலவச எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us