sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசு பஸ் ஊழியர்கள் 700 பேர் கைது

/

அரசு பஸ் ஊழியர்கள் 700 பேர் கைது

அரசு பஸ் ஊழியர்கள் 700 பேர் கைது

அரசு பஸ் ஊழியர்கள் 700 பேர் கைது


ADDED : ஜன 23, 2025 04:33 AM

Google News

ADDED : ஜன 23, 2025 04:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன் சி.ஐ.டி.யூ., சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் தமிழக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே நடத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அகவிலைப்படி உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 2023 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய கால பலன்களை வழங்க வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். போக்குவரத்து கடனை அடைத்து தொழிலாளர்களின் பணப் பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் தெய்வராஜ், செயலாளர் லெனின், துணைத் தலைவர் ராஜேந்திரன், அரசு போக்குவரத்து மாநில சம்மேளன உதவி தலைவர் பிச்சை, அரசு போக்குவரத்து மதுரை மண்டல தொழிலாளர் சங்கத் தலைவர் மாரியப்பன், அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யூ., ஓய்வு பெற்ற தொழிலாளர் நலச்சங்க தலைவர் அழகர், பொதுச் செயலாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us