ADDED : அக் 18, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதலை கண்டித்து தமிழ் மீனவர் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் ரயில் மறியல் போராட்டம் அறிவித்தனர். பெரியார் பஸ்ஸ்டாண்ட் அருகே ஏராளமானோர் திரண்டனர். கூட்டமைப்பு தலைவர் ரஜினி தலைமை வகித்தார். அகில இந்திய மீனவர் காங்., தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ பேசினார். மார்க்சிஸ்ட் நகர் செயலாளர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தினர் ரயில் மறியலுக்காக ஸ்டேஷனை நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலர் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களில் 92 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்த போலீசார், மாலையில் விடுவித்தனர்.