ADDED : செப் 17, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை நகர போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்பட்ட 158 கஞ்சா வழக்குகளில் 975 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.5 கோடி மதிப்பிலான இவற்றை அழிக்க நகர போலீசார் முடிவு செய்தனர்.
போதைப் பொருள் ஒழிப்புக் குழுவின் தலைவர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் துணை கமிஷனர் அனிதா உள்ளிட்ட உறுப்பினர்கள் முன்னிலையில் கஞ்சா அழிக்கப்பட்டது.
சட்டவிதிமுறைகளை பின்பற்றி, நெல்லை மாவட்டம் நான்குநேரி அசெப்டிக் சிஸ்டம் தொழிற்சாலையில் கஞ்சாவை அழித்தனர்.