sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பராமரிப்பின்றி பாழடையும் கட்டடம்

/

பராமரிப்பின்றி பாழடையும் கட்டடம்

பராமரிப்பின்றி பாழடையும் கட்டடம்

பராமரிப்பின்றி பாழடையும் கட்டடம்


ADDED : ஜூலை 16, 2025 01:36 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே கட்டக்குளத்தில் ஊராட்சி அலுவலகம், சேவை மையம், சமுதாயக்கூடம் பராமரிப்பின்றி பாழடைந்து வருவதாக கிராமத்தினர் வேதனை தெரிவித்தனர்.

அப்பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி கூறியதாவது: இங்கு ஊராட்சி அலுவலகம், சேவை மையம், சமுதாயக்கூடம் அருகருகே அமைந்துள்ளன. இப்பகுதிகளில் ஏராளமான செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், நடந்து செல்லக் கூட வழியின்றி காடு போன்று காட்சியளிக்கிறது.

சமுதாயக் கூடம் கட்டி 10 ஆண்டுகளாகிறது. கதவுகள், ஜன்னல்கள் துருப்பிடித்து வலுவிழந்துள்ளன. ஜன்னல் கதவுகள் உடைந்து, விழும் நிலையில் உள்ளது. சேவை மைய கட்டடம் மராமத்து செய்து பயன்படுத்த முடியாமல் செடி, கொடிகளால் சூழப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இதனை சீரமைக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us