sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சிறுவன் காலில் விழ வைத்ததாக வன்கொடுமை வழக்கு பதிவு

/

சிறுவன் காலில் விழ வைத்ததாக வன்கொடுமை வழக்கு பதிவு

சிறுவன் காலில் விழ வைத்ததாக வன்கொடுமை வழக்கு பதிவு

சிறுவன் காலில் விழ வைத்ததாக வன்கொடுமை வழக்கு பதிவு


ADDED : ஜன 19, 2025 11:25 PM

Google News

ADDED : ஜன 19, 2025 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, சங்கம்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கிராம கோவிலில் நடந்த புரட்டாசி திருவிழாவில் சிறுவர்களுடன் நடனமாடினார். அங்கிருந்தவர்கள் அவரை திட்டியதுடன், 'வேட்டியை மடித்துக்கட்டாதே' எனக்கூறி தாக்கியதால் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து, மதுரையில் பணிபுரியும் தன் தந்தையிடம் கூறுவதற்காக கிராமத்தை விட்டு, அச்சிறுவன் புறப்பட்டார். சில நாட்களுக்கு பின் ஊருக்கு திரும்பியபோது, அவரை, கிஷோர், உக்கிரபாண்டியன், மணிமுத்து, பிரம்மா, சந்தோஷ், நித்திஷ் ஆகியோர் கடத்திச் சென்று தாக்கி உள்ளனர்.

அப்போது அங்குள்ள கோவிலில் முட்டி போட வைத்து, அடித்து மிரட்டி, 6 வயது சிறுவன் உட்பட அனைவரது கால்களிலும் விழ வைத்ததாகவும், தனக்கு பாதுகாப்பு வேண்டியும் உசிலம்பட்டி டவுன் போலீசில் சிறுவன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கிேஷார் உள்ளிட்ட ஆறு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us