ADDED : ஆக 09, 2025 04:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி கண்ணுடையாள்புரம் பகுதியில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த அய்யனார் கூறியதாவது: இப்பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கிறோம். இங்குள்ளோர் இல்ல விழாக்கள், சமுதாய கூட்டங்களை நடத்த சமுதாயக்கூடம் இல்லை. வீதிகளில் பந்தல் அமைத்து நடத்த வேண்டிய நிலை உள்ளதால் போக்குவரத்து இடையூறு உள்ளது. மழை, வெயில் காலங்களில் திருமணம், காதணி விழாக்களை நடத்துவதற்கு சிரமமாக உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை என்றார்.
ஊராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, 'அரசு நிலம் எதுவும் அப்பகுதியில் இல்லை. யாராவது நிலம் கொடுக்க முன் வந்தால் உடனே இத்திட்டம் செயல்படுத்தப்படும்' என்றார்.